டி20 மகளிர் உலக கோப்பை பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தீப்தி அபாரம்

பர்மிங்காம்: டி 20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகள் பர்மிங்காமில் நேற்று மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்மிரிதி மந்தனா 44 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீதி கவுர் 36 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்தில் 34 ரன்கள் விளாச இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் முனீபா அலி மட்டுமே 41 ரன்கள் குவித்தார். குல் பெரோசா 12, ஆயிஷா ஜாபர் 12, சாயிரா ஜபீன் 2, நாடால்லா பர்வேஸ் 7, கேப்டன் பாத்திமா சனா 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீப்தி சர்மா 4 ஓவர் வீசி 10 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகி விருதை பெற்றார்.

Related Stories: