தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

 

தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது என்று சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். மக்களின் நன்மதிப்பை அதிமுக இழந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானது முதல் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. யார் கருத்தையும் நான் கேட்க மாட்டேன் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். குடும்பத்தினரின் கருத்தை மட்டுமே கேட்பேன் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

தோல்விக்கான காரணத்தை இதுவரை எடப்பாடி பழனிசாமி அறியவில்லை. கேள்வி கேட்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கத்தில், தற்போது கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை சாதாரணமாக துரோகி என்கிறார் எடப்பாடி. தனது தவறை இதுவரை எடப்பாடி பழனிசாமி உணரவில்லை.

தொடர் தோல்வி என்று கூறுவதை விட, மக்கள் மத்தியில் அதிமுக புறக்கணிக்கப்பட்டு விட்டது என்பதே சரி. தவறை திருத்திக்கொள்ள மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாமக இல்லை என்றால் அதிமுகவுக்கு 7 இடங்கள்தான் கிடைத்திருக்கும். கூட்டணில் பாமக இல்லை என்றால் எடப்பாடியே சிரமப்பட்டு வெற்றி பெற்றிருப்பார். மகனை அரசியலுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார்.

சர்வாதிகாரப் போக்குடன் அதிமுக தலைமை செயல்பட்டு வருவதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தனது குறையை உணராமல் பிறர் மீது குறை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி செயற்குழுவையாவது கூட்ட வேண்டும்; அவருக்கு விருப்பமான தேதியிலேயே நடத்தட்டும். ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிக்கொண்டுள்ளது. ஒரு இயக்கத்தில் மாற்றுக் கருத்தை ஏற்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். அதிமுக செயற்குழுவை கூட்டி தோல்விக்கான காரணத்தை விவாதிக்க வேண்டும்.

அதிமுக தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. தோல்விக்கு தானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியவர் ஜெயலலிதா. ஒரு இயக்கத்தில் மாற்றுக் கருத்தை ஏற்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். கனவுலகில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியே வர வேண்டும். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி நிலைமை என்ன என்பதை எடப்பாடி உணர்ந்தாரா. நிர்வாகிகளை அழைத்து விவாதிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும்.

 

 

Related Stories: