சென்னை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு காசிமேடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
