×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 13: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மில் ஒன்றில் கழிவு பஞ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி, ஏ.முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு மில் உள்ளது. இந்த மில்லில் ஒரு பகுதியில் கழிவு பஞ்சுகளை குவித்து வைத்துள்ளனர். கழிவு பஞ்சில் நேற்று சுமார் 1 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை நிலை அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த முழு விவரங்களும் தெரிய வரும் என வன்னியம்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

 

Tags : Punchu Mill ,Srivilliputur ,Vanniyampatty ,Srivilliputur, A. ,Muthulingapura ,
× RELATED சிங்கப்பெண் துவக்க விழாவுக்கு வந்த...