×

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை சரி செய்யக்கோரி 19ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் தவெக வாக்குறுதி அளித்தது.

தற்போது விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு. மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அர்த்தமற்ற காரணங்களை தவெக அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்;

தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் தவெக அரசை வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 19ம் தேதி (வெள்ளி) காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இரா.பசுபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : AIADMK ,Tamil Nadu ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்