கிங்ஸ்டன்: இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வென்ற நிலையில் அடுத்த 2 போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. அடுத்ததாக 3 போட்டி கொண்ட டி.20 தொடரில்முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 51, கேப்டன் குசால் மெண்டிஸ் 36, துசன் ஷனகா 22, பதும் நிசங்கா 18 ரன் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கில் ஜேசன் ஹோல்டர் ,ஷமர் ஜோசப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 37, ஹெட்மயர் 17, ரோஸ்டன் சேஸ் 16 ரன்னில் அவுட் ஆன நிலையில் கேப்டன் ஷாய் ஹோப் நாட் அவுட்டாக 65 ரோவ்மன் பவல் 10 ரன் அடித்தனர். 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹோல்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
