தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம்.!!

சென்னை: திருநெல்வேலியில் நடைபெறும் ரயில்வே பணிகளால் வரும் 19-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில்கள், ரயில்வே பணிகள் காரணமா வழக்கமான ரயில் பாதையில் செல்லாமல் சுற்றி செல்ல இருப்பதால், சில ரயில் நிலையங்களுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி செங்கோட்டை – ஈரோடு ரயில்களும் , தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில்களும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் திருச்சி – திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில்கள் திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட ரயில் நிலயங்களுக்கு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

பாலருவி எக்ஸ்பிரஸ், லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு செல்லாது என கூறப்பட்டுள்ளது. ஒருசில ரயில்கள் சிலநாட்களில் வழக்கமா போல இயங்கும் என்பதால் தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் பயணிகள் தாங்கள் பயணிக்க போகும் ரயில்களின் இயக்கநிலையை சரிபார்த்துவிட்டு பயணிக்கவேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: