மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று மாலை 4.10 மணியளவில் வகுப்புகள் முடிந்து, காரக்கோட்டை இந்திராநகரை சேர்ந்த முருகேசன் மகன் லோகேஸ்வரன் (12), முகேஷ் மகன் ராசித் (12), ரமேஷ் மகன் ராஜமுரளி (13) ஆகிய 3 பேரும் சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது, தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவர்கள் 3 பேர் மீதும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 3பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்சாவூர் – மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் காரக்கோட்டை அருகே மறியலில் ஈடுபட்டதால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி சதீஷ்குமார் மற்றும் கலெக்டர் மோகனச்சந்திரன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்கு பதிந்து மதுபோதையில் கார் ஓட்டிய டிரைவர் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை சேர்ந்த உலகநாதனை (51) கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் செரத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கிஜஸ்டின் (16), புருனோ (17) உள்ளிட்ட 5 பேர் ஒரே பைக்கில் நேற்று மாலை பள்ளி முடிந்து விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ெசன்றுள்ளனர். மேட்டத்தூர் பிரிவு சாலை அருகில் திரும்பிய போது விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ஜஸ்டின், புருனோ ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையி்ல சேர்க்கப்பட்டனர்.
