குஜராத்: சூரத்தில் உள்ள சர்தானா பூங்காவில் கூண்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலி மீது பார்வையாளர்கள் கற்களை வீசியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, இதை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

