விழுப்புரம் : கோட்டக்குப்பத்தில் மயான பிரச்சனையில் மீனவப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயானத்தை அளவீடு செய்து கல் நட்ட பிறகு அங்கிருந்த 21 படகுகளை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர். 21 படகுகளை அகற்ற போலீசார் ஜே.சி.பி. இயந்திரத்தை அப்பகுதிக்கு வரவழைத்தனர். படகுகளை அகற்ற கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்கள் முன்பு படுத்து பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
