சென்னை: வடசேரியைச் சேர்ந்த பிரதீஷ் ஆன்லைனில் ரூ.12 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். கடன் தந்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டதால் சிறை செல்வதற்காக இளைஞர் வினோத முடிவு எடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை, டிஜிபி அலுவலகத்துக்கு இளைஞர் பிரதீஷ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார். சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி இளைஞர் பிரதீஷை போலீஸ் புழல் சிறையில்அடைத்தனர்.
