டெல்லி: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 2,821 இல்லத்தரசிகள் துரதிர்ஷ்டவசமாக தங்கள் உயிரை மாய்த்து கொண்டதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இது நாளொன்றுக்குச் சராசரியாக 7 பெண்கள் என்ற எண்ணிக்கையாகும். அதே நேரம் 2024-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 48.9% பேர் 22,113 பேர் இல்லத்தரசிகள், மேலும் இது நாடு தழுவிய மொத்த தற்கொலை சதவீதத்தில் ஏறக்குறைய 13% ஆகும். கடுமையான குடும்ப சூழல் சார்ந்த மனஅழுத்தங்கள் மற்றும் மன உளைச்சலே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் தற்கொலைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளே முக்கிய காரணமாக 33.5% உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன என்றும், தமிழகத்தில் இந்த சதவீதம் 38.8% ஆக அதிகமாக உள்ளது என்றும் NCRB-ன் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
