- நிதி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசு
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- அமைச்சர்
- செங்கோட்டையன்
- அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்
சென்னை: தமிழ்நாட்டிற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி நிதியை விடுவித்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,000 கோடி தேவை என மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அந்த முழுத் தொகையையும் முன்கூட்டியே வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறினார். கோவை, நீலகிரியில் பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் விரைவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கின்றன என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு உள்ளார்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழலில், இந்த நிதி முன்னெச்சரிக்கை பணிகளுக்குப் பெரிதும் உதவும் என்று கூறி உள்ளார். ஜாதி சான்றிதழ் விரைந்து கிடைக்கவும், பத்திரப் பதிவு துறையில் உள்ள தேக்கங்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
