நாகை : அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற பேரிடர் முன்னேற்பாடு ஆய்வில் தவெகவினர் அத்துமீறல். விதிகளை மீறி அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தவெகவினர் தொடர்ந்து அத்துமீறி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேடையில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், நாகை கோட்டாட்சியருக்கு அருகே நாகை தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரனுக்கு இருக்கை அமைக்கப்பட்டது. அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தவெகவினர் தலையிடக் கூடாது என என்.ஆனந்த் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வேதாரண்யம் தவெக வேட்பாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, தவெக நிர்வாகிகள் அதிகாரிகளோடு பங்கேற்பு.
