சென்னை: முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் தொகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மின்வெட்டை கண்டித்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மின்உற்பத்தி, பராமரிப்பு, விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
