திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற திருவிழாவில் சிறுமிக்கும், பூபதி (20) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து இருவரும் 10 நாட்களுக்கு தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். பூபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமி பள்ளிக்கு சென்றபோது, சிறுமியை பூபதி விராலிமலை நாகமங்கலம் அருகே முள்காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பள்ளிக்கு வராத சிறுமி குறித்து பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் பதறியடித்து தேடி கொண்டிருந்தனர். அப்போது மாலை வீட்டிற்கு வந்த சிறுமியிடம் கேட்டபோது பூபதி தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பூபதியை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: