சென்னை: அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய் செய்தி பரப்புவோர் மீது புகார் தந்தும் நடவடிக்கை இல்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. பட்டப்பகலில் ஓடஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றை தடுக்கவும் வக்கில்லை. ஊழலையும், உண்மை முகத்தையும் வெளிக்கொண்டு வந்து பதிவிட்டால் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டுகிறது. இது பாசிசமா அல்லது பாயாசமா? என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
