பாம்பு கடித்து முதியவர் சாவு

 

 

வில்லிபுத்தூர், ஜூன் 9: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா ராவுத்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் குருசாமி(63). இவர் கடந்த 5ம் தேதி மாலை ஆட்டுக்குட்டிக்கு இலைகள் மற்றும் தழைகள் பறிப்பதற்காக வீட்டிலிருந்து சென்றார். வெகு நேரமாகியும் வராததால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் பாம்பு கடித்து மயங்கிய நிலையில் குருசாமி கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு குருசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: