×

கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் ஆண்டிபட்டி எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

 

 

 

வருசநாடு, ஜூன் 9: கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னம்மாள்பட்டி, கண்டமனூர், கணேசபுரம் ,ஆத்தங்கரைப்பட்டி, அண்ணாநகர், தேவராஜ்நகர், பாலூத்து, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு சிங்கராஜபுரம், முறுக்கோடை, தும்மக்குண்டு, வண்டியூர் உள்ளிட்ட பகுதி வாக்காளர்களுக்கு ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் நன்றி தெரிவித்தார். இதில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், ‘‘எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவதற்காக நான் அறும்பணி ஆற்றுவேன் பொதுமக்கள் அனைவரும் கவலை கொள்ள வேண்டாம்’’ என்றார்.

Tags : Andipatti MLA ,Kadamalai ,Mayilai ,Varusanadu ,Andipatti DMK MLA ,Ponnammalpatti ,Kandamanur ,Ganeshapuram ,Atthankaraipatti ,Annanagar ,Devarajnagar ,Baluthu ,Kadamalaikundu ,Mayiladumbarai ,Sinharajapuram ,Murukkodai ,Thummakundu ,Vandiyur ,Kadamalai Mayilai union ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...