தார்ச்சாலை பணிகள் வேகமெடுக்குமா?

 

வருசநாடு, ஜூன் 9: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், கோடாலியூத்து, முத்துராஜபுரம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சுற்றுவட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்குகிறது. அதனால், இங்கு விளைவிக்கப்படும், விளைபொருட்களான பீன்ஸ் அவரை, எலுமிச்சை, கொட்டை முந்திரி, இலவம் பஞ்சு உள்ளிட்டவைகளை இந்த சேதமடைந்த சாலை வழியாக விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்வது தினந்தோறும் சிரமமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வட்டார பகுதியில் உள்ள மலைக்கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: