மதுரையில் லியல் குற்றங்களை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

 

மதுரை, ஜூன் 9: மதுரை கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட செயலர் தமிழரசன், மாநில துறை செயலாளர் செல்வா, மாநில குழு உறுப்பினர் சுப, மதுரை மாவட்ட பொருளாளர் தர், இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் அக்ஷயா, மாநகர் மாவட்ட செயலாளர் வேல்தேவா, மாநில குழு உறுப்பினர் விக்னேஷ்வரி உள்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அனைவரும், ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Related Stories: