சூர்யவன்ஷி மீது எதிர்பார்ப்புகளின் சுமையை ஏற்றக் கூடாது: சவுரவ் கங்குலி அட்வைஸ்

 

கொல்கத்தா: அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயதான வைபவ்சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடிய நிலையில் அவரை விட குறைந்த வயதில் இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிக ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி: இளம் பேட்டிங் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியை நிதானமாக விளையாட அனுமதிக்க வேண்டும். அவர் மீது எதிர்பார்ப்புகளின் சுமையை ஏற்றக் கூடாது.

அவரை நாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு வயது வெறும் 15 தான். அவர் அழுத்தத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் நாம் அவரிடம் அதையேதான் பார்க்கிறோம். ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷி எதிர்கொண்டதை விட இங்கிலாந்தின் சூழல்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும், தனது ஆட்டத்தை மாற்றியமைத்துக் கொள்வது அவருக்கு ஒரு சவாலாக இருக்கும்.

நிச்சயமாக, இந்தியாவுக்காக விளையாடுவது வித்தியாசமானது, மேலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆடுகளங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். புதிய பந்தில் சீம் ஆகும், மேலும் சற்று அதிக பவுன்ஸும், அதிக அசைவும் இருக்கும். அதனால் ஆட்டம் சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் அவரிடம் அபாரமான திறமை இருப்பதாக நான் நினைக்கிறேன், என்றார்.

டிவில்லியர்ஸ் ஆதரவு
தென்ஆப்ரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், சூர்யவன்ஷியின் அனுபவமின்மையை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. மேலும், அவர் தேசிய அணித் தேர்வுக்கான கதவைத் தகர்த்தெறிந்துவிட்டார். இந்திய டி20 அணியில் தனது இடத்திற்கு அவர் தகுதியானவர். எனவே நான் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: