×

குற்றாலத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த படகு குழாம்

தென்காசி,ஜூன் 8: குற்றாலம் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை படகு குழாம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. குற்றாலத்தில் கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் குற்றாலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது படகு குழாம் அழகு படுத்தும் பணி ஆகும்.

சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் ஒரு பகுதியாக படகு குழாம் திகழ்ந்தது. சுற்றுலா துறையின் சார்பில் ரூ.11 கோடி செலவில் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தை சுற்றி கரைகளில் டைல்ஸ் தளம் அமைக்கப்பட்டு பொம்மைகள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு காலையில் நடை பயிற்சி மேற்கொள்கின்றவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது படகு குழாம் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. குற்றாலம் சீசனும் துவங்கிவிட்டது. சாரல் இன்னும் சில தினங்கள் நன்றாக தொடரும் பட்சத்தில் படகு குழாம் நிரம்பி விடும். படகு சவாரியும் தொடங்கிவிடும். அதற்கு முன்னதாக குளத்தின் கரை பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Courtallam ,Tenkasi ,Aindharuv road ,DMK ,
× RELATED தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு