மதுரை, ஜூன் 8: மதுரை மூன்றுமாவடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அன்பு தலைமை வகித்தார். தென் மண்டல ஐஜி மகேஸ்குமார் அகர்வால், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கபில் குமார் சரத்கர் முன்னிலை வகித்தனர். மதுரை டிஐஜி அபினவ் குமார், திண்டுக்கல் டிஐஜி சசிமோகன், எஸ்பிக்கள் அரவிந்த் (மதுரை), பிரதீப் (திண்டுக்கல்), நாதா (விருதுநகர்), ஸ்நேகப்பிரியா (தேனி) மற்றும் டிஎஸ்பிக்கள் பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை எப்படி சரிசெய்வது என்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதற்கான ஆலோசனைகளையும், அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்
- மதுரை
- திண்டுக்கல்
- மாவட்ட எஸ்.பி.
- மதுரை மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ADGP
- அன்பு
- தென் மண்டலம்
- ஐஜி
- மகேஷ் குமார்...
