கேரள: தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கேரளத்தில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
