×

உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா.. ராஜ்நாத் சிங்

டெல்லி: பல நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.

இது தொடர்பான தனது சமீபத்திய எக்ஸ் பதிவில், 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7% வளர்ச்சியடைந்தது. குறிப்பாக நான்காம் காலாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 7.8% ஆக அதிகரித்தது. “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” (Reform, Perform, Transform) என்ற மந்திரத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் பொருளாதார உறுதித்தன்மையையும் உள்ளார்ந்த வலிமையையும் இது பறைசாற்றுகிறது என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது ஸ்திரத்தன்மை, நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்துள்ளது. ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் தொலைநோக்குப் பார்வையை நோக்கி நம் நாடு முன்னேறி வரும் நேரத்தில், இந்த சிறப்பான வளர்ச்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை வலுப்படுத்துகிறது என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

 

Tags : India ,Rajnath Singh ,Delhi ,EU ,Defence Minister ,
× RELATED திமுக தயவில் தான் தற்போது தமிழக்தில்...