பாடாலூர், ஜூன் 6: ஆலத்தூர் தாலுகா தெற்குமாதவி கிராமத்தில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்்டதோடு, 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாறு உள்ளது. இந்த மருதையாற்றில் அடிக்கடி மணல் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் டிராக்டரில் மணல் அள்ளுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையிலான போலீசர்கள் தெற்குமாதவி கிராமத்தில் உள்ள மருதையாற்றுக்கு சென்றார். அப்போது போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக் கொண்டிருந்த மர்ம நபர் தப்பி ஓட முயற்சித்தனர். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (60). முத்துக்கண்ணு மகன் அன்பழகன்(35). என்பது தெரியவந்தது. அவர்கள் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து கைது செய்ததோடு, ஜேசிபி மற்றும் டிராக்டரையும் அதிலிருந்த 1 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
