49 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்

சென்னை: தமிழகத்தில் 49 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். பள்ளி மாணவர்​களுக்கு ஏப்​ரல் 17ம் தேதி முதல் கோடை விடு​முறை விடப்​பட்​டது. இந்த நாட்​களில் தமிழக அரசு சார்பில் மாணவர்​கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​பட்​டன.

இந்நிலையில், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாட்கள் பள்ளி திறப்பை கல்வித்துறை தள்ளி வைத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 4ம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று அறிவித்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 49 நாட்கள் கிடைத்தது.

அதன்​படி கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே சீராக நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், 2026-27ம் கல்வியாண்டுக்கான முதல் நாளான நேற்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

குறிப்பாக, நீண்ட கோடை விடுமுறைக்குப் பிறகு தங்களின் நண்பர்களையும் ஆசிரியர்களையும் பார்க்கும் ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். சில இடங்களில் மாணவர்களுக்கு மலர் தூவியும் மாலை அணிவித்தும் ஆசியர்கள் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4 கோடி பாட புத்தகங்களும் சுமார் 5 கோடி நோட்டுப் புத்தகங்களும் பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் முதல் நாளே இவற்றைப் பெறக்கூடிய வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு விலை​யில்லா பாடநூல்​கள், நோட்​டுப் புத்​தகங்​கள் போன்​றவற்றை விநி​யோகம் செய்​வதற்​கான தயார் நிலையில் பள்ளிக் கல்வித்துறை இருந்ததால், முதல் நாளான நேற்றே மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: