புயல் வேகத்தில் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு.! எப்போது இரும்பு மனிதராக மாறுவீர்கள்?

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த “மயிலிறகால் வீசாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று தமிழக அரசை சாடியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எங்கள் அரசு குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என்று சொன்னீர்களே. ஆனால் தற்போது புயல் வேகத்தில் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை மயிலிறகால் வீசி தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கை காப்பற்ற நீங்கள் எப்போது இரும்பு மனிதராக மாறுவீர்கள். உறுதியான உத்தரவுகளை வழங்குவீர்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பதிவாக குற்ற சம்பவங்கள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மக்களை அச்சத்தில் வைத்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை, போதைப் பொருள்கள் கடத்தல் கும்பலை ஒடுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவியுள்ளார்.

குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுடைய கவலையாக இருக்கிறது, இது உங்களுக்கு தெரிகிறதா! ஒட்டுமொத்த குற்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தும் வகையில் இரும்பு கரம் கொண்டுநடவடிக்கை எடுப்பீர்களா அல்லது மயிலிறகால் வீசி காற்று வாங்குவீர்களா என்பதை காலம் தான் பதில் சொல்லும் போல, எங்கே போகிறது தமிழகம்..! எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: