சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளும் லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடையவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் போதிய முதலீடு இல்லாமை, பழைய இயந்திரங்கள், காலிப்பணியிடங்கள், குறைந்த பிழித்திறன் மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக முழுத் திறனுடன் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் நேரடி பாதிப்பை கரும்பு விவசாயிகளும், ஆலைத் தொழிலாளர்களும் சந்தித்து வருகின்றனர். கரும்புகளை உரிய நேரத்தில் ஆலைகள் வாங்காததால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர். கரும்புக்கான நிலுவைத் தொகைகளும் பல இடங்களில் தாமதமாக வழங்கப்படுவதால் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.
எனவே, தற்போதைய தமிழக அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்கவும், நவீனமயமாக்கவும் தனித்துவமான மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
