சென்னை: முதலமைச்சர் விஜய் பிரசார மூடில் இருந்து அரசாங்க மூடுக்கு வர வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தனது 65வது பிறந்தநாளையொட்டி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோயிலில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஆதிபுரீஸ்வரர், பட்டினத்தார், தட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு கோயிலாக சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் முதலமைச்சர் திருச்சி சென்றிருந்தார். இன்னும் தேர்தல் பிரசார மூடில் இருந்து அவர் வெளியில் வரவில்லை. முதலமைச்சர் ஆவதற்கு மக்கள் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்கள். உடனே போர்க்கால அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை பிஎம்ஸ்ரீ. இந்த திட்டம் மாணவர்களை உலக அளவில் உயர்த்துகின்ற திட்டங்கள். இந்த திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல் மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு டேக் ஆப் ஆக வேண்டும். பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கிறேன் என்று சொல்வதால் பிளாக் ஆயிட கூடாது. ஒயிட்டா இருந்தா பரவாயில்லை. பெட்ரோல், டீசல் விலைகு கிடைக்க வேண்டிய உதவி மறுக்கப்பட்டு விட்டது. அதனால் தவெக அரசு மத்திய அரசின் உலக பட்டியலில் இந்தியாவில் குறைவாக இருக்கிறது. இன்னும் போர் சூழல் மறைந்த பின்பு நிச்சயமாக குறைக்கப்படும்.
டெல்லிக்கு சென்ற சிங்க பெண் திட்டத்திற்காக முதலமைச்சர் தலைமையில் ஆரம்ப விழா இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது. 20 நாள் என்பது குறைந்த நாள் கிடையாது. 20 நாட்களுக்குள் அனைத்து அரசாங்க நிர்வாகத்தையும் சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார். அண்ணாமலை கட்சி மாற போகிறாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் மவுனமாக சென்றார்.
