மதுரை: திருமங்கலம் பகுதிகளில் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் இரவு முழுவதும் காத்திருந்து பெட்ரோல் போடும் நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
