×

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

கரூர் : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்.

முத்துக்குமரன் தலைமை வகித்தார். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீடுகள் பட்டியல் மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்ததாவது,இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 தமிழ்நாட்டில் வருகின்ற 17.07.2026 முதல் 31.07.2026 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், 01.08.2026 முதல் 30.08.2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகள் 2 முக்கிய கட்டங்களாக திட்டமிடப்பட்டு, அதற்கான பயிற்சி வகுப்பு இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், ​இரண்டாம் கட்டமாக, தனிநபர் தரவுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக வீடுகள் பட்டியலில் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இந்த முதற்கட்டபணிகளை மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரகம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் வீடுகள் பட்டியலிடும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலர்கள் மூலம் மாநகராட்சி அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் மேற்படி அலுவலகங்களில் இப்பணியில் ஈடுபடவுள்ள அனைத்து உதவியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர்கள் என மொத்தம் 106 நபர்களுக்கு 01.06.2026 முதல் 03.06.2026 வரை மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இம்முறை கணக்கெடுப்பு முழுமையாக மொபைல் செயலிகள் மற்றும் பிரத்யேக இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரக அலுவலர்.ஜெகதீஸன், குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,India ,Muthukumaran ,
× RELATED நாகர்கோவில் அருகே வாலிபர்களை...