×

இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: லெபனான் அறிவிப்பு

லெபனா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தும் வரை போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் அறிவித்துள்ள நிலையில்,பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாக டிரம்ப் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க போர் தொடுத்தது. இஸ்ரேல் உதவியுடன் தொடங்கிய போர் 40 நாட்களுக்கு மேல் நீடித்தது. இந்த போரினால் உலகளவில் பெரும் பொருளாதாரம் சரிவை ஏற்பட்ட நிலையில்,உலக நாடுகளில் அழுத்தத்தை தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் அவ்வப்போது இரு தரப்பினரிடையே தாக்குதல்கள் நீடித்து வருகின்றனர். நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சியில் அமெரிக்க, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல், லெபனான் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என தெரிவித்தது. போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை, வேகமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனால் போர் நிறுத்தம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே லெபனான், ஹிஸ்புல்லா சண்டை நிறுத்தம் ஒப்பந்தம் நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளது.

Tags : Israel ,Hizbullah ,Lebanon ,Iran ,Trump ,US ,
× RELATED இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: லெபனான் அறிவிப்பு