காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே மேல்கதிர்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் 16,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த 2 மாதங்களாக குடோனுக்கு ஏற்றிச் செல்லப்படாமல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
