மதுரை, ஜூன் 2: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், நீலம் பண்பாட்டு மையத்தை சார்ந்த முருகானந்தம் அளித்த மனுவில், மதுரை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. பள்ளி வகுப்பறை கட்டடம், ஆய்வுக்கூடம், கழிவறைகள், சுற்றுச்சுவர் மிக இடியும் நிலையில் உள்ளது. பல பள்ளிகளில் மின் சாதன பொருட்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார வழித்தடத்தில் உள்ள வயர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 19ன் படி ஒவ்வொரு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்…
மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறுபோல் தண்ணீர் வீணாக செல்கிறது. கோடை வெயில் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ள நிலையில் இப்படி தண்ணீரை வீணடிக்கலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
