- விவசாயிகள் சங்கம்
- முதல் அமைச்சர்
- பிறகு நான்
- ஜோசப் விஜய்
- தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
- தேனி மாவட்ட கலெக்டர்
தேனி, ஜூன் 2: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக, விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடுத்த வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் கூட்டுறவு சங்கங்களில்,
5 ஏக்கருக்குள் உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் தற்போது விவசாயிகளை ஏமாற்றும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டிப்பதோடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
