×

செல்போன் கடையில் திருட்டு

ஊட்டி, ஜூன் 2: ஊட்டி மெயின் பஜார் பகுதியில் செல்போன் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை சிலர் திருடி சென்றுள்ளனர். ஊட்டி மெயின் பஜார் பகுதியில் காந்தல் பகுதியை சேர்ந்த அக்பர் பாபு செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், தனது கடையில் பல விலை உயர்ந்த செல்போன்களை விற்பனைக்கு வைத்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல், தனது கடையை நேற்று முன்தினம் பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டு அதில் இருந்த 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் தடயவில் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், குன்னூர் பகுதியிலும் செல்போன் கடை ஒன்று உடைத்து திருட்டு நடந்துள்ளது.

Tags : Ooty ,Ooty Main Bazaar ,Akbar Babu ,Kandal ,
× RELATED கால்வாய்களில் சேகரமாகும் பிளாஸ்டிக்...