கடும் வெயிலால் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: வெயில் தாக்கம், வெப்ப அலை வீசிவருவதால் பொதுமக்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுரைகள் வழங்கியுள்ளது. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் நீண்ட நேரம் கடுமையான உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம். காலணி அணியாமல் வெளியே செல்லக்கூடாது, மது, தேநீர், காபி, குளிர்பானம், அதிக சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: