கோவை: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை முருகன் கோயிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் 3 நாட்களுக்கு மலைப்பாதையில் பக்தர்கள் சொந்த வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயில் வாகனங்கள் மூலம் மலைக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.
