இன்று முதல் 4 நாட்கள் இடுக்கி அணையை சுற்றிப்பார்க்க அனுமதி

திருவனந்தபுரம்: பண்டிகை நாட்களில் இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளை சுற்றிப்பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை 4 நாட்கள் இந்த அணைகளை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அணைகளை சுற்றி பார்க்கலாம். தினமும் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கட்டணம் குழந்தைகளுக்கு ரூ. 25, பெரியவர்களுக்கு ரூ. 50 ஆகும். கேமரா உள்பட எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

Related Stories: