- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- மேகதாது
- சாமராஜ்நகர்
- ஜோசப் விஜய்
- கர்நாடகா அரசு
- கர்நாடக மாநில அரசு
- மெகேடடு…
சாம்ராஜ்நகர்: மேகதாதுவில் அணை கட்டி குடிநீர் வசதி செய்யும் கர்நாடக அரசின் செயல் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி சாம்ராஜ்நகரில் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக மாநில அரசின் மேகதாது திட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டி சாம்ராஜ்நகரில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி சர்க்கிளில் கூடிய கன்னட ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கர்நாடக சேனாப்படையின் மாநில தலைவர் சீனிவாச கவுடா கூறுகையில், ‘ தமிழகத்தின் தற்போதைய முதல்வர் விஜய், மேகதாது திட்டத்தை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசின் திட்டத்தால் லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கும், ஏழெட்டு மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பதை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாமல், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தொடர்ந்தால் போராட்டம் தீவிரமடையும்’ என்றார்.
