சென்னை: பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை கண்டிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளத்தில் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் ED ரெய்டு நடத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக ED ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் வீணா. எக்ஸாலாஜிக் கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடில் நிறுவனம் இடையேயான ஒப்பந்தத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை கண்டிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது; பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை ரெய்டுகளை கண்டிக்கிறேன்.”பினராயி விஜயன் ஏன் இதுவரை பாஜகவால் குறிவைக்கப்படவில்லை?” எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பதை இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
