×

எஸ்டிபிஐ மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

 

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத்தின் மேன்மையை பறைசாற்றும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னதமான தியாக வாழ்வை நினைவுகூரும் இந்நாள், நமக்குள் தியாக சிந்தனையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் விதைக்கும் நன்னாளாகும். சமூகத்தின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடியதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சலும், அறிவாற்றலும், அர்ப்பணிப்பும் நமக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

தியாகத்தை போற்றும் இந்நாளில், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்படவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நாம் உறுதியேற்போம். மக்களிடையே அன்பும், பரஸ்பர பாசமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரவும்; உலகெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கவும் இப்புனித நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : STBI State ,President ,Bakrid Eid ,Chennai ,Muhammad Mubarak ,STBI Party ,
× RELATED சென்னை ரயில்வே போலீசார் பயன்படுத்தி...