திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 78 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் திருடுபோனது அம்பலமானது. கோவிலின் பாதுகாப்பிலும் பல குளறுபடிகள் இருப்பதாக கேரள டிஜிபி அறிக்கை அளித்திருக்கிறார்.
பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த தங்க விளக்கை திருடிவிட்டுஅதற்கு பதிலாக வெள்ளி விளக்கை வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலின் கருவறையில் இருந்த வைர நாமத்தையும் செப்பனிடுவதற்கு என்று எடுத்து சென்றவர்கள் இன்னும் அதனை ஒப்படைக்கவில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது என கேரள டிஜிபி அறிக்கையில் தகவல் அளித்திருக்கிறார்.
கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்டிருப்பதாக கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
