ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த தகவலை அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: