சென்னை: நடப்பு ஜூன் மாதத்துக்கான 9.91 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தியது. கர்நாடக அணை நிரம்பி திறந்துவிடப்பட்ட உபரிநீரை கணக்கில் கொள்ள முடியாது என்றும் தமிழ்நாடு தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது.
