இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.!! அதிமுக

சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பும் – எஸ்.பி.வேலுமணி & சி.வி.சண்முகம் தரப்பும் சமாதானமாகி இணைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ஐடி விங்-பேஜில் “எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ – அம்மா என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அதோடு சேர்த்து கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. நம் இலக்கு ஒன்றுதான்… அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! என்று பதிவிடப்பட்டு உள்ளது. இதனிடையே சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி, அனைத்தும் முடிந்து எல்லோரும் ஒன்றாகி விட்டோம். தாய் – பிள்ளைகள் எல்லாம் ஒன்றாகி விட்டோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் தேர்தல் தோல்வி காரணமாக எழுந்த கருத்துவேறுபடுகளால பிளவுபட்ட அதிமுக , தற்போது மீண்டும் ஒன்றாகி விட்டதை உணர்த்துவதை போல இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Related Stories: