×

எண்ணூரில் கஞ்சா விற்பனை; பிரபல ரவுடி, டிரைவர் கைது

 

எண்ணூர்: சென்னை எண்ணூர் வ.உ.சி நகரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது அங்குள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக கஞ்சா வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக கஞ்சா வியாபாரியும் சரித்திர பதிவேடு ரவுடியுமான கைப்புள்ள தினேஷ் (35) கைது செய்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

‘’திருவள்ளூர் புதுப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன் (39) என்பவர் தனக்கு கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து கொடுப்பார். அதனை வீட்டில் வைத்து பாக்கெட்டுகளாக மடித்து சில்லறையில் விற்பனை செய்வேன்’ என்று தினேஷ்தெரிவித்துள்ளார். இதையடுத்து தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பிறகு பாலமுருகனுடன் தினேஷின் கூட்டாளிபோல் தொடர்புகொண்டு தங்களுக்கு ஒடிசாவில் இருந்து 5 கிலோ கஞ்சா வாங்கி வரவேண்டும், வந்தவுடன் பணத்தை கொடுத்து விடுகிறோம்’ என்றனர்.

இதையடுத்து 5 கிலோ கஞ்சாவை லாரியில் மூட்டைக்களுடன் மறைத்து கொண்டுவந்து, எண்ணூர், அன்னை சிவகாமி நகர் அருகே லாரி பார்க்கிங் யார்டில் வைத்து கஞ்சாவை கொடுக்க முயன்ற பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவரை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Olur ,Celebrity ,Tilur ,Chennai ,Tolur Va. ,U. ,C ,Kanapla Dinesh ,
× RELATED நெல்லிக்குப்பம் அருகே சொகுசு காரில்...