சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயிலில் விவசாயிகள் போராட்டம்

சென்னை: தமிழக வெற்றி கழகம் அரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதே போன்று சிறு விவசாயிகளுடைய கடன்கள் 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த தமிழக விவசாய சங்கத்தினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அவர்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காத காரணத்தினால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு இந்த தள்ளுபடி செய்யதது ஏற்புடையது அல்ல என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். நேற்றைய தினம் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாய சங்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது

Related Stories: